வழிகாட்டும் திருவருட்பேரொளிகள்
பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ் (Brahmarishis Hermitage) என்னும் அமைப்பு ஒப்புயர்வற்ற தெய்வீக புருஷர்களான ரிஷிகள் மற்றும் சித்தர்களின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதலின்படி செயல்படும் ஆன்மிகப் பாதையாதலால், அவர்களால் பாதுகாக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. இந்த ஈடு இணையற்ற சூக்ஷ்ம ஆசான்கள், அரிதான தெய்வீக ஆற்றல்களையும், உன்னத மெய்ஞானத்தையும், தியான பயிற்சி முறைகளையும், ஆன்மிகச் சூக்ஷ்மங்களையும் சூக்ஷ்ம உலகைத் தொடர்பு கொள்ளும் ஆற்றல் பெற்ற மனித குருவின் மூலம் மக்களுடன் பகிர்கின்றனர். பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ் அமைப்பின் குருவாக எங்கள் குருநாதர் தேவாத்மானந்தா ஷம்பலா திகழ்கிறார்.
அனைத்து தியான வகுப்புகள், ஒளிப்பேராற்றலை ஸ்தாபிக்கும் நிகழ்ச்சிகள் (energy anchoring sessions), புனித யாத்திரைகள் அல்லது எத்தகைய முக்கிய நிகழ்ச்சிகளாயினும் இந்த மகத்துவம் மிக்கச் சூக்ஷ்ம ஆசான்களின் ஆசிகளாலும், அவர்களது சூக்குமமான வருகையாலும், தனிப்பெரும் அருளாலும் வழிநடத்தப்படுகின்றன.
எளிமையின் திருவுருவாகத் திகழும் இத்தகைய ஆசான்களின் மகத்துவத்தைப் பற்றி நாம் அறிந்தது சில, அறியாதது பல. இவர்களது கருணை, பணிவு, அர்ப்பணிப்பு ஆகியவை ஒப்பிடமுடியாதவை ஆகும். இவர்கள் எங்களுக்கு தெய்வத்திற்கு நிகரானவர்கள் ஆவர். இப்புவியில் ஆன்மிகத்திற்குப் புத்துயிரூட்டிப் புதுப்பிக்கச் செய்து, மக்களின் ஆன்மிக நிலையை உயர்த்த பேரார்வத்தோடு பணியாற்றும் இந்த மெய் ஞானமடைந்த ஆசான்களே எங்கள் வழிகாட்டிகளாவர்.
இவர்களது வாழ்க்கை வரலாறு சாமானிய மனிதருக்கும் ஊக்கமளிக்கிறது.
ரிஷிகள் மற்றும் சித்தர்களின் பொற்பாதங்களில் எங்களது சிரம் தாழ்த்தி பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறோம்.
எளிமையின் திருவுருவாகத் திகழும் இத்தகைய ஆசான்களின் மகத்துவத்தைப் பற்றி நாம் அறிந்தது சில, அறியாதது பல. இவர்களது கருணை, பணிவு, அர்ப்பணிப்பு ஆகியவை ஒப்பிடமுடியாதவை ஆகும். இவர்கள் எங்களுக்கு தெய்வத்திற்கு நிகரானவர்கள் ஆவர். இப்புவியில் ஆன்மிகத்திற்குப் புத்துயிரூட்டிப் புதுப்பிக்கச் செய்து, மக்களின் ஆன்மிக நிலையை உயர்த்த பேரார்வத்தோடு பணியாற்றும் இந்த மெய் ஞானமடைந்த ஆசான்களே எங்கள் வழிகாட்டிகளாவர்.இவர்களது வாழ்க்கை வரலாறு சாமானிய மனிதருக்கும் ஊக்கமளிக்கிறது.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...