மாயை | குணங்கள் | ஐக்கியத்தன்மை | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

மாயை


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

மாயை என்பது பிரபஞ்சம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளாகும்.

ஆன்மா மனதைக் கருவியாகக் கொண்டு மாயையின் வழியாக பார்க்கும்பொழுது இவ்வுலகம் புலப்படுகிறது. ஒளிப்படக்காட்டி (ப்ரொஜெக்டர்) வழியாகத் திரைப்படம் தெரிவது போல், நம் மனதின் வழியாக இவ்வுலகைக் காண்கிறோம்.

மாயை என்பது மெய்ப்பொருளாகியப் பேரொளியை மறைக்கும் திரையாகும்.

மாயையின் நோக்கம் படைப்பில் பன்முகத்தன்மையை ஏற்படுத்துவதாகும். எனவே, மாயை இல்லையெனில் இப்படைப்பு அனைத்தும் பேரொளியாக மட்டுமே காணப்படும். எவ்வித வேறுபாடும் சாத்தியமில்லை.

மாயையாகிய இவ்வுலகம் புலன்களால் உணரப்படுவதாகும். இது கால வரையறைக்கு உட்பட்டது. ஆனால், இறையொளியானது கால வரையறையற்ற மெய்நிலையாகும்.

மாயையானது படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என மாற்றத்திற்கு உட்படுவதாகும். ஆனால், பேரொளியானது எவ்வித மாற்றத்திற்கும் உட்படாது நித்தியமாக நிலைத்திருக்கும் மெய்பொருளாகும்.

ஆத்ம ஞானத்தை அடையும் முன், மாயை மட்டுமே உணரப்படுகிறது, பேரொளியானது உண்மையற்றதாகத் தோன்றுகிறது. ஆத்ம ஞானத்தை அடைந்து பேரொளியை உணர்ந்த பின் மாயையானது உண்மையற்றதாகத் தோன்றுகிறது. ஆதலால் தான் ஆத்ம ஞானிகள் மாயை என்பது பொய்த்தோற்றம் என்கிறார்கள்.

குணங்கள்


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

குணங்கள் அல்லது முக்குணங்கள் என்பது மாயையின் மூன்று தனித்துவமான கூறுகளாகும். அவை சத்வ, ரஜோ, மற்றும் தமோ குணங்களாகும்.

இம்மூன்று குணங்களும் அனைவரிடத்திலும், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் வெவ்வேறு விதத்தில் மற்றும் விகிதத்தில் சேர்ந்துள்ளன.

அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகியவை வெவ்வேறு விகிதத்தில் சேரும்போது எவ்வாறு எண்ணற்றப் பல புதிய வண்ணங்கள் தோன்றுகிறதோ அதுபோல, வெவ்வேறு விகிதத்தில் இருக்கும் இந்த முக்குணங்களே பிரபஞ்ச படைப்புகள் ஒன்றோடொன்று வேறுபட்டிருப்பதற்கான காரணமாகும்.

சத்வ குணம் என்பது ஞானம், சமநிலை, நல்லிணக்கம், உள்ளத்தூய்மை, படைப்பாற்றல், நேர்மயமாக்கல், அமைதி, நல்லொழுக்கம் முதலிய தன்மைகள் ஆகும்.

ரஜோ குணம் என்பது பேரார்வம், செயல்திறன், தன்முனைப்பு முதலிய தன்மைகள் ஆகும்.

தமோ குணம் என்பது சமநிலையற்றத்தன்மை, ஒழுங்கின்மை, மனக்கவலை, மந்தநிலை, சோம்பல், வன்முறை, அறியாமை, காலம் தாழ்த்துதல், அலட்சியம் முதலிய தன்மைகள் ஆகும்.

ஒரு தனிநபரின் அல்லது பொருளின் குணாதிசயமானது இந்த முக்குணங்களும் ஒன்றிணைந்து ஏற்படுத்துகின்ற விளைவாகக் கருதப்படுகின்றது. எனவே குணங்கள் நாம் பழக்க வழக்கத்தினால் செய்யும் செயல்களுக்கும், அதையடுத்து விளைகின்ற வாழ்க்கை சூழல்களுக்கும் ஒரு முக்கிய காரணியாக உள்ளன.

இறையொளியானது மாயையினால் பாதிக்கப்படுவதில்லை, ஆதலால் அது நிர்குணம் (குணங்களற்ற நிலை) என அறியப்படுகிறது.

ஐக்கியத்தன்மை


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

ஐக்கியத்தன்மை என்பது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும் தன்மையாகும். ஒரு ஆன்மா மற்றொரு ஆன்மாவோடும், ஒரு இதயம் மற்றொரு இதயத்தோடும் இணைந்திருப்பது ஐக்கியத்தன்மை ஆகும்.

ஐக்கியத்தன்மை என்பது பிரபஞ்சத்தின் பல்வேறு படைப்புகள் ஒன்றோடொன்று வேறுபட்டிருந்தாலும் அவை அனைத்திலும் பேரொளியை காண்பதாகும்.

ஐக்கியத்தன்மை என்பது உயிருள்ள ஜீவராசிகள் மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்தும் ஒரே மூலமான பேரொளியில் இருந்து தோன்றியவை என்பதை அறிந்துணர்வதாகும் .

ஐக்கியத்தன்மையில் நாம் மாயையைக் கடந்து செல்கிறோம்.

ஐக்கியத்தன்மை வேற்றுமையில் ஒற்றுமையை கொணர்கிறது.

ஐக்கியத்தன்மை என்பது உடல், மனம், புத்தி,உணர்வு மற்றும் ஆன்மிகம் ஆகிய அனைத்து நிலைகளில் நம் வாழ்வை ஆன்மிக சாதனைக்கேற்ப அமைத்துக் கொள்ளவதாகும். இந்த ஐக்கிய நிலை யோக நிலையை அடைய வழிவகுக்கும்.