இறைப்பேரொளி | ஆன்மா | குரு | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

இறைப்பேரொளி


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

இறைப்பேரொளியே படைப்பின் ஆதாரமாகும். இறைப்பேரொளியின் தளம் பரபிரம்ம லோகம் என்று அழைக்கப்படுகிறது.

இறைப்பேரொளியில் இருந்து கோடானுகோடி விண்மீன் திரள்கள், பல்வேறு உலகங்கள் மற்றும் பலவிதமான உயிரினங்கள் தோன்றின.

இறைப்பேரொளியானது எதிர்பார்ப்பில்லாத அன்பு, கருணை, பேரமைதி, பேரானந்தம், பேரறிவு, புனிதத்தன்மை, பேராற்றல், உயிர் சக்தி மற்றும் பலவற்றை உள்ளடக்கியது.

இறைப்பேரொளி சர்வ வல்லமை பொருந்தியது, எங்கும் எதிலும் வியாபித்திருப்பது மற்றும் அனைத்தும் அறிந்த பேரறிவாகும்.

இறைப்பேரொளி மாற்றங்களுக்கும், காலத்திற்கும் அப்பாற்பட்ட மெய் நிலையாகும்.

நாம் ஜீவாத்மாவாகப் பிறப்பெடுப்பதற்கு முன்னர் இறையொளியோடு ஐக்கியமாக இருந்தோம். எனவே, நாம் இறையொளியிலிருந்தே தோன்றினோம்.

இறையொளி நுண்ணிய அலைவரிசையில் இருப்பதால் இந்த நில உலகில் நமது புறக் கண்களால் காண இயலாது. இருப்பினும், ஆழ்ந்த தியானத்தில் அதை உணரவும், காணவும் முடியும்.

இறைப்பேரொளி குணமளிக்கிறது.

இறைப்பேரொளி கடவுளாகும்.

ஆன்மா


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

ஆன்மா என்பது ஆதியந்தமற்ற இறைவனின் அம்சமாகும்.

ஆன்மா இறையொளியின் தளத்திலிருந்து வந்த ஒளித்துகளாகும். எனவே ஆன்மா அன்பு, அமைதி, உள்ளத்தூய்மை முதலிய பேரொளியின் அனைத்து அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.

இப்படைப்பின் அனுபவங்களைப் பெறுவதே ஆன்மாவின் லட்சியமாகும்.

ஆன்மாவானது நமது மார்பு பகுதியின் மத்தியில் ஆனந்தமய கோஷத்தில் உறைகிறது.

இப்படைப்பின் அனுபவங்களைப் பெற ஆன்மாவுக்கு உடலின் துணை தேவைப்படுகிறது. எனவே உடல் ஆன்மாவைத் தாங்கி நிற்கிறது.

ஆன்மா மரணத்தைக் கடந்து, உடல் அழிவுற்ற பின்னரும் நிலைத்திருக்கிறது.

ஆன்மாவின் பயணம் அதன் ஆதிமூலமான இறைப்பேரொளியைத் திரும்பச் சென்றடையும் பொழுது முடிவுறுகிறது.

மனசாட்சி என்பது ஆன்மாவின் குரலாகும்.

நாம் ஆன்மாக்கள்.

குரு


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

குரு என்பவர் ஆத்மஞானியாவார். நாம் இறைப்பேரொளியை மீண்டும் சென்றடையும் பயணத்தின் மார்கதரிசி ஆவார்.

குரு என்பவர் அனைத்து ஆன்மிக மெய்நிலைகளையும் அறிந்துணர்ந்தவர். அஞ்ஞானம் எனும் இருளை நீக்குபவர்.

குரு என்பவர் தர்மத்தை எடுத்துரைத்து அதன் பாதையில் நம்மை அழைத்துச் செல்பவர்.

குருவானவர் தீட்சை அளித்து, நமது ஆன்மிக சாதனை முழுமை அடைந்து, பரிபூரணனாய் தனித்துச் செயல்படத் துவங்கும் வரை துணை நிற்கிறார்.

குருவானவர் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்பவர். மேலும் அவர் எவர்மீதும் எதையும் திணிப்பதில்லை.

குரு என்பவர் உத்வேகம், ஊக்கம் மற்றும் வலிமையின் நிலையான ஆதாரமாவார்.

குருவே இறைப்பேரொளியை அடையும் எளிய மார்கமாவார்.

தீட்சை பெற்று ஆன்மிகப் பயணத்தைத் துவங்கத் தயாராக உள்ள ஆன்மிக ஆர்வலர் முன், தக்க தருணத்தில் குருவானவர் தோன்றுகிறார்.

குரு இறைப்பேரொளியின் வடிவமாவார்.