மனம் | அகங்காரம் | கர்ம வினை | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

மனம்


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

மனம் என்பது ஆறாவது அறிவாகும். பரிணாம வளர்ச்சியின் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படும் மனம், உயரிய மானுட அனுபவங்களைப் பெற உதவுகிறது.

மனதின் முக்கிய நோக்கமானது மாயையின் துணைகொண்டு படைப்பின் அனுபவங்களைப் பெறுவதாகும்.

மனமானது ஐம்புலன்களான - தோல், கண்கள், நாக்கு, செவி மற்றும் மூக்கு இவற்றின் துணையோடு தொடு உணர்ச்சி, பார்த்தல், சுவைத்தல், கேட்டல் மற்றும் நுகர்தல் ஆகிய அனுபவங்களை நமக்கு அளிக்கிறது.

மனமும், உடலும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. இதில், மூளை மனதிற்கும், புலன்களுக்கும் இடையே இணைப்பு மையமாகச் செயலாற்றுகிறது.

மனம், உணர்வுகளின் உறைவிடமாகும். மனதில் நினைவுகளும், கர்ம வினைகளும் பதிவாகின்றன.

மனம், மனித உடல் முழுவதும் பரவியுள்ளது, மேலும், எண்ண ஆற்றலின் வழியே பரந்து, விரிந்து முழுப் பிரபஞ்சத்தையும் ஊடுருவிச் செல்லும் திறனையும் கொண்டுள்ளது.

மனதின் செயல்பாடு மிகவும் நுட்பமானதாகவும், பல பரிமாணங்களைக் கொண்டதாகவும் கருதப்படுகிறது.

அனுபவித்தல், கற்பனைத் திறன், படைப்புத் திறன் (creativity), உணர்ந்து கொள்ளுதல், நினைவில் வைத்தல், நினைவுகூர்தல் போன்றவை மனதின் மற்ற திறன்களாகும்.

அதிகப்படியான கர்மவினைப் பதிவுகள் மனதைப் பலவீனப்படுத்தி, ஆன்மிக வளர்ச்சியைத் தடுத்து, ஆன்மா உயர்நிலையை அடையத் தடை ஏற்படுத்துகிறது.

ஒருவரின் தூய்மை பெரும்பாலும் அவரது மனத்தூய்மையைப் பொறுத்தே அமைகிறது. எனவே, மனதிலிருந்து அரிஷட்வர்கங்கள் எனப்படும் எதிர்மறைத் தன்மைகளைக் களைதல் மிகவும் அவசியமாகும்.

இத்தகைய எதிர்மறைத் தன்மைகளைக் களைந்து, ஒருவரின் மனதைத் தூய்மைப்படுத்துவதில் ஆன்மிகச் சாதனை மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.


அகங்காரம்


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

அகங்காரம் என்பது தனது சுயத்தை அல்லது ஆன்மாவைத் தவறாக அடையாளப்படுத்தும் நிலையாகும்.

தான் ஆன்மா என்றுணராமல், உடல் அல்லது மனமே நான் எனக் கருதுவது அகங்காரமாகும்.

ஆன்மா உடலினுள் உறையத் தொடங்கியவுடன், தனது உண்மையான ஆன்ம சொரூபத்தை அல்லது சுய அடையாளத்தை மறந்து அவ்வுடலோடு ஒன்றி அவ்வுடலே தானாய் உணரும்பொழுது அகங்காரம் பிறக்கிறது.

மனதும், மாயையும் அகங்காரத்தை தோற்றுவிக்கிறது.

அகங்காரம் ஆன்ம ஞானத்தை மறைக்கிறது.

அகங்காரம் எல்லைகள் வகுத்து கட்டுப்படுத்துகிறது. அகங்காரம் தவறாக வழிநடத்துகிறது.

அகங்காரம் துன்பங்களுக்கு காரணமாகிறது.

அகங்காரம் ஆன்மிக சாதனையில் இடையூறு விளைவித்து ஆத்ம ஞானத்தை அடையும் முயற்சியில் தடையை ஏற்படுத்துகிறது.

அன்பினால் மட்டுமே அகங்காரம் மறைகிறது.


கர்ம வினை


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

நம் செயலின் விளைவே கர்ம வினையாகும்.

செயலின் நோக்கத்தைப் பொறுத்து அதன் விளைவு நல்ல அல்லது தீய பதிவுகளை உண்டாக்குகிறது, அதுவே, நல்வினை அல்லது தீவினை எனப்படுகிறது.

நல்வினை இன்பத்தையும், தீவினை துன்பத்தையும் அளிக்கிறது.

இந்த நல்வினை மற்றும் தீவினைப் பதிவுகள், அவற்றை ஒத்தப் பிறப் பதிவுகளை ஈர்த்து, அவற்றுள் தாக்கத்தை ஏற்படுத்தி, அதுவே இயல்பாக மாறி, இவ்வியல்புகளே பழக்கவழக்கங்களாகி இறுதியில் விதியாக உருவாகிறது.

கர்மவினைப் பதிவுகள் மனதிலும், உடலிலும் பதிவாகிறது.

நாம் அகங்காரத்தோடு செயல்படும்பொழுது மனமானது தீய பதிவுகளை அரிஷத்வர்க்கங்கள் அல்லது ஆறுவகையான எதிர்மறை தன்மைகளாக வெளிப்படுத்துகிறது.

நாம் ஒரு ஆன்மா என்ற புரிதலோடு, 'சாட்சி' பாவத்தில் அல்லது 'சரணாகதி' நிலையில் செயல்படும்பொழுது நாம் கர்ம வினைகளைப் பெறுவதில்லை. அவ்வாறு செய்யப்படும் செயல்கள் கர்மயோகமாகும்.

நல்வினை மற்றும் தீவினைப் பதிவுகள் இரண்டுமே மனதில் கர்ம சுமையைச் சேர்த்து, ஆன்மிக பயணத்தில் முன்னேறத் தடையாகின்றன.

ஆன்மாக்களாகிய நாம் கர்ம வினைகளின் காரணமாக மேலே முன்னேற முடியாமல் இப்புவியில் சிக்கித் தவிக்கிறோம்.

கர்ம வினை, பிறப்பு இறப்பு சுழற்சிக்குக் காரணமாகிறது.

இந்தப் பிறவியின் நோக்கம், கர்ம வினைகளைப் போக்கி, இந்தப் பிறப்பு இறப்பு சுழற்சியை முறியடித்து, நமது பிறப்பிடமான இறைப்பேரொளியிடம் திரும்பிச் சென்று வீடுபேறு அடைவதாகும்.