யோகம் | அன்பு | அமைதி | விழிப்புணர்வு | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

யோகம்


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

யோகம் என்பது ஒன்றிணைதல் ஆகும். அதாவது, ஆன்மா இறைவனுடன் ஒன்றிணைதல் ஆகும்.

யோகம் என்பது இறைவனுடன் ஒன்றிணைய, மனமுவந்து முழுக்கவனத்துடன் முயற்சிகளை மேற்கொள்வதாகும். ஆதலால், விழிப்புணர்வு யோகக்கலைக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.

நம் உடலைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு ஆசனங்கள் அல்லது சுவாசப் பயிற்சிகள் ஹத யோகம் அல்லது கிரியா யோகமாகிறது.

நம் மனதின் துணைக் கொண்டு செய்யப்படும் மந்திர ஜபம், புலனடக்கம் அல்லது தியானம் ராஜ யோகமாகிறது.

நம் உணர்வுகளின் துணைக் கொண்டு வெளிப்படுத்தப்படும் அன்பு, பக்தி அல்லது வழிபாட்டு முறைகள் பக்தி யோகமாகிறது.

நமது செயல்களின் துணைக் கொண்டு, எவ்வித பலனையும் எதிர்பாராது செய்யப்படும் தன்னலமற்ற சேவையும், அதன் விளைவுகளில் பற்றற்று இருப்பதும் ​​கர்ம யோகமாகிறது.

நம் புத்தியின் துணைக் கொண்டு செய்யப்படும் பகுத்தாய்வு மற்றும் ஆத்ம விசாரணை ஞான யோகமாகிறது.

அனைத்து யோகங்களும், ஆத்ம ஞானத்தை அடைவதின் மூலம் இறைநிலையை உணர்தலில் முடிவுறுகிறது.

ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில், மேலே குறிப்பிட்டுள்ள யோகங்களில் ஒன்றையோ, சிலவற்றையோ அல்லது அனைத்தையுமோ தேர்ந்தெடுத்துப் பயிற்சி செய்வதின் மூலம் ஆத்ம ஞானத்தை அடையலாம்.

யோகமார்க்கத்தில் தடையாய் இருப்பது அகங்காரமாகும்.

ஒரு யோகி என்பவர் எக்கணமும் யோகத்தில் நிலைத்திருப்பவர் ஆவார்.

அன்பு


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

அன்பு என்பது தெய்வீக உணர்வாகும்.

அன்பே நமது இயல்பாகும்.

அன்பு மென்மையான, மிகவும் மேன்மையான மனித உணர்வாகும்.

ஒவ்வொரு உயிரும் அன்பிற்காக ஏங்குகிறது .

அன்பு குற்றம் பார்ப்பதில்லை.

அன்பு அனைவரையும் அரவணைத்து செல்லும். அன்பு எதையும் மன்னிக்கும். அன்பு குணமாக்கும் மருந்தாகும். அன்பு நல்வழி வழிகாட்டும். அன்பு மாற்றத்தை ஏற்படுத்தும்.

அன்பு வரையறை அற்றது.

அமைதி


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

அமைதி என்பது சமநிலையான மனநிலையாகும்.

அமைதி என்பது பூரண மனநிறைவு பெற்ற நிலை; தேவைகள், விருப்பங்கள் அற்ற நிலையாகும்.

அமைதியே வாழ்வின் அடிப்படை அம்சமாகும்.

மௌனம் அமைதியைத் தரும்.

நம்முள்ளும், மற்றவர்களிடமும், இயற்கையுடனும் ஒத்திசைந்து நல்லிணக்கத்தோடு வாழும் பொழுது அங்கு அமைதி நிலைகொள்கிறது.

தனி ஒரு மனிதனின் அமைதி குடும்ப அமைதிக்கும், அதன் விளைவாகச் சமுதாய மற்றும் உலக அமைதிக்கும் வழிவகுக்கிறது.

அமைதியின் அதிர்வலைகள் நமது பூமியில் உள்ள அனைத்து வன்முறைகளையும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்தது.

விழிப்புணர்வு


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

விழிப்புணர்வு என்பது தன்னையும், வெளி உலகையும் புரிந்துணரும் அல்லது கவனித்தறியும் திறனாகும்.

விழிப்புணர்வு என்பது ஆன்மா, பல்வேறு ஆன்மிக மெய்நிலைகளை அறிந்துணரும் திறனாகும்.

விழிப்புணர்வு ஜாக்ரத், ஸ்வப்னம், சுசுப்தி, துரியம் முதலிய பல்வேறு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவை உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் பங்கேற்பை பொறுத்து அமையப்பெற்றது.

ஜாக்ரத் அல்லது விழிப்பு நிலை என்பது அன்றாட உலகியற்செயல்களின் பொழுது உள்ள நிலையாகும். இங்கு உடல் (பஞ்சேந்திரியங்கள்) மற்றும் மனம் (எண்ணங்கள்) இரண்டும் செயல்படுகின்றன.

ஸ்வப்னம் அல்லது கனவு நிலை என்பது உறக்கத்தில் நிகழ்வதாகும். இது உடல் அசைவற்று, மனம் செயல்படும் நிலையாகும்.

சுசுப்தி அல்லது ஆழ் உறக்க நிலை என்பது ஒருவர் எண்ணங்களற்ற நிலையை உணர்வதாகும். இந்நிலையில் உடல், மனம் இரண்டும் செயல்படுவதில்லை.

துரியம் அல்லது ஆன்ம விழிப்புநிலை என்பது ஆன்மா தன்னையறிந்த நிலையாகும். இந்நிலையில் மனம் மற்றும் உடலின் பங்கேற்பைக் கடந்து, ஆன்மா செயல்படுகிறது.

துரிய நிலை என்பது உன்னத விழிப்புநிலை ஆகும். இந்நிலை மற்ற மூன்று நிலைகளையும் உள்ளடக்கியதாகும்.

துரிய நிலையில் உள்ளுணர்வு செயல்படுகிறது. மேலும், ஆன்மா சாட்சி பாவம் ஏற்கிறது.

மெய்ஞானிகள் எப்பொழுதும் மற்ற மூன்று நிலைகளையும் கடந்து, உயரிய துரிய நிலையில் நிலை கொள்பவராவர்.

நம் ஆன்மிக முன்னேற்றத்தின் அளவுகோல், நாம் அடைந்துள்ள விழிப்புணர்வின் அளவே ஆகும்.